பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்
பலகலை கற்போம் வாருங்கள்
அறிவை வளர்க்க பாருங்கள்
ஆழ்ந்த ஞானம் பெற்றிடுங்கள்
படிப்பும் பாட்டும் பல்கலையும்
பழகப் பழகச் சுவைத்திடுமே
இந்தப் பள்ளிப் பருவத்திலே
இனிய நற்குணங்கள் பழகிடுமே
கல்விச் செல்வம் பெற்றுவிட்டால்
கவலை இன்றி வாழ்ந்திடலாம்
கருத்தொருமித்த பயிற்சியினால்
கலங்கரை விளக்கமாய் உயர்ந்திடலாம்
எனவே
பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்
பலகலை கற்போம் வாருங்கள்
No comments:
Post a Comment