Total Pageviews

Monday, April 13, 2009

புத்தர் கதை

சீடர் புதிய ஆடை கேட்டார்

ஆடையைக் கொடுத்த புத்தர் ''பழைய ஆடை எங்கே '' என்றார். சீடர் '' ஆடை கிழிந்து விட்டதால் அதை ஜன்னல் திரை ஆக்கி விட்டேன்'' என்றார். புத்தர் இந்த பதிலில் திருப்தி அடையவில்லை. "பழைய ஜன்னல் திரை எங்கே'' என்றார். ''ஜன்னல் திரை கிழிந்ததால் சமயலறையில் சூடான பாத்திரங்களை பிடிக்க உபயோகிக்கிறோம்'' என்றார் சீடர். "அந்த பழைய பிடித்துணி என்னவாயிற்று" என்றார் புத்தர். "அந்த துணியில் இப்போது தரை துடைக்கிறோம்"என்றார் சீடர். "ஓஹோ! பின் அதை என்ன செய்தீர்கள்" என்றார் புத்தர். "மிகவும் நைந்து விட்ட அந்தத் துணி இப்போது உங்கள் அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் திரியாய் இருக்கிறது" என்றார் சீடர். இந்த பதிலில் மகிழ்ச்சியடைந்தார் புத்தர்.

No comments:

Post a Comment