Total Pageviews

Saturday, May 23, 2009

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காத்து கிடந்தேனே தினமும் காத்து கிடந்தேனே
அரை மணி வந்து எனைக் கவர்ந்தாய்
அனுதினம் வந்து எனைத் தொலைத்தாய்
இந்த அலாதிக் கவர்ச்சியில் உன்னிடம் உன்னிடம்
என்னைத் தொலைத்தேனே

வேலை முடிந்ததும் என் கண்கள் உன்னை
அன்போடு பார்த்து கொஞ்சம் சிரிக்கும்
நீ சற்று கலங்கி கண்ணீர் துளி விட்டால்
என் மனம் உந்தன் பாரம் சுமக்கும்;
மின்சாரம் இன்றி சில நேரம் இருந்தால்
உனைப் பார்க்க எந்தன் கண்கள் துடிக்கும்
விளம்பர இடைவேளை நடுவிலே வந்தால்
கடுப்பாகி எந்தன் முகம் சிவக்கும்
தினந்தோறும் தொடரும் என்று முடிக்கும் உன்னை
மறுநாளும் பார்த்திட துடிப்பேன்
விடுமுறை நாட்கள் ஏன் வருகின்றதென்று
நீ வரும்வரை பார்த்து காத்திருப்பேன்




2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. title supera irukku.kavithaium nannathan irukku.

    ReplyDelete